சமந்தாவிற்கு கிப்ட் அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை நயன்தாரா

சென்னை: நடிகை சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார் நயன்தாரா என்று தகவல்கள் கோலிவுட்டில் உலா வருகிறது.

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்து அசத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கவில்லை. விரைவில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா சினிமா, குடும்பம் என பிஸியாக இருந்தாலும் கூட, பிசினஸில் பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட 9 ஸ்கின் கேர் எனும் அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தை துவங்கினார். இதனுடைய லான்ச் நிகழ்ச்சி மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில், தன்னுடைய 9 ஸ்கின் கேரில் இருந்து நடிகை சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கிப்ட் அனுப்பியுள்ளார் நயன். இதை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் அன்புக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.