கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய நடிகை ரம்பா... ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார் நடிகை ரம்பா.90களில் கனவுக்கன்னியாக இருந்த ரம்பா உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.


தனது அழகான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த 2000 ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்த ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில் ரம்பா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் திடீரென தான் பயணித்த கார் விபத்துக்குள்ளானதாக கூறியுள்ளார். பள்ளியிலிருந்து தனது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது கார் விபத்தில் சிக்கியதாகவும், அவரும் அவரது குழந்தைகளும் சிறு காயங்களுடன் விபத்தில் இருந்து தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.