புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா இணைந்தார்

ஐதராபாத்: புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பில் நாயகியான ராஷ்மிகா நேற்று முதல் கலந்துகொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.