படுக்கையை பகிராததால் பட வாய்ப்புகளை இழந்தேன்; நடிகை ரவீனா டாண்டன் பரபரப்பு பேட்டி

பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று கமல் பட நடிகை ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கமல் நடித்த 'ஆளவந்தான்', அர்ஜுன் நடித்த 'சாது' உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரவீனா டாண்டன். தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் முன்னணி ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் ரவீனா டாண்டன் கூறியதாவது:- கடந்த 90ஆம் ஆண்டுகளில் எனக்கு வந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதற்கு காரணம் பாலிவுட்டின் உள்ள எழுதப்படாத விதி. இந்த விதியின்படி பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும். ஆனால் அதற்கு தான் உடன்படாததால் எனக்கு வந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டன.

மேலும், என்னுடைய சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டுவர பலர் முயற்சித்தனர். அதிலிருந்து தற்போது தப்பிப்பது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது என்றும் நான் படுக்கையை பகிர வில்லை என்பதால் என்னை எந்த ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள்.

மேலும் என்னை திமிர் பிடித்தவர் என்றும் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்றும் மீடியாவில் தவறான செய்திகளை பரப்பி எனக்கு வந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே நெப்போட்டிஸம் குறித்து பல பிரபலங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் படுக்கையை பகிராததால் தனது வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக ரவீனா டாண்டன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.