மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறாராம் நடிகை சாய் பல்லவி

ஐதராபாத்: முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் சாய் பல்லவி தனது படங்களில் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறார்.

நடிகைகள் மேக்கப் போடுவது திரையில் அவர்களை இன்னும் அழகாக காட்டும். மேக்கப் இல்லாமல் கேமரா முன்னால் வருவதற்கு நிறைய நடிகைகள் தயங்குவார்கள்.ஆனால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் சாய் பல்லவி தனது படங்களில் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறார்.

இயக்குநர்கள் மேக்கப் போடச் சொன்னாலும் அவர் விடுகிறார். மேக்கப் போடாததற்கான காரணங்களை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “எனது முதல் படமான பிரேமம் முதல் இதுவரை ஒரு படத்திலும் மேக்கப் போட்டதில்லை.

பள்ளிக் காலத்தில் எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருந்தது. முகத்தில் உள்ள பருக்களால் நான் மிகவும் வேதனைப்பட்டேன். என் குரல் நன்றாக இருக்காது என்று நினைத்தேன். பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன்.

ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன்” என்றார்.