வாரிசு நடிகை குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை சோனம் கபூர் பதில்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் சமீபத்தில் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்கள் தான் காரணம் என்றும் அவருக்கு வந்த பட வாய்ப்புகளை வேண்டுமென்றே தட்டிப் பறித்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பாலிவுட்டில், பிரபலங்களின் வாரிசுகள் தவிர வேறு யாரும் வளர்ச்சி அடைய முடியவில்லை என்றும் புதிதாக யாரும் திரை உலகில் வளர்ச்சி அடைந்தால் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் காரசாரமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூர், வாரிசு நடிகை என்ற குற்றச்சாட்டு குறித்து சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

ஆம் நான் என் தந்தையின் வாரிசுதான். அவரால்தான் நான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு அவமானம் அல்ல. இந்த இடத்தை எனக்கு கொடுக்க எனது தந்தை எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவரது மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

சோனம் கபூரின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.