நடிகை சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை... சுந்தர்.சி தகவல்

சென்னை: சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை. ஒருவேளை என் வாழ்க்கையில் குஷ்பூ வரவில்லை என்றால், இவரிடம்தான் என் காதலை சொல்லிருப்பேன் என்று இயக்குனர் சுந்தர்.சி. தெரிவித்துள்ளார்.

பேய் பட டிரெண்ட் பீக்கில் இருந்த போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ் ஒருபக்கம், சுந்தர்.சியின் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி, ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது.

அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கியுள்ளார். இதில் அரண்மனை படத்தின் 3ம் பாகம் 2021 அக்டோபரில் வெளியானது. சுந்தர்.சியின் காஃபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் மீண்டும் அரண்மனை படத்தை எடுத்துள்ளார்.

விஜய் சேதுபதியும், சந்தானமும் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை முதல் பாகத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த சந்தானம், ஹீரோவானதால் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, தன்னுடன் பணியாற்றிய நடிகைகள் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை. ஒருவேளை என் வாழ்க்கையில் குஷ்பூ வரவில்லை என்றால், இவரிடம்தான் என் காதல் சொல்லிருப்பேன். அப்படி ஒரு தங்கமான குணம். அவரது அண்ணா அவரை விட்டு எங்குமே நகரமாட்டார். இருவருமே ஒன்றாகத்தான் மரணமடைந்தனர்” என்று அவர் கூறினார்.