வ்டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகிறாரா அதிதிஷங்கர்

சென்னை: லவ்டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டைரக்டர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் நுழைந்தாலும், இவரது முதல் படமான 'விருமன்' படத்தில், கார்த்தியின் ஜோடியாக நடித்து கிராமத்து பெண்ணாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அதிதி ஷங்கர். அப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது, சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, பிரபல இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ஒரு படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இருந்தும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, அதிதி ஷங்கர் மேலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'லவ் டுடே' என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அப்படத்தை இயக்கியதோடு, அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

இப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'கொரோனா குமார்' என்ற படத்தில் சிம்பு நடிக்கவிருந்த நிலையில், இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கபோவதாகவும் கூறப்பட்டது. ஆனால், சிம்பு இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு பதிலாக தற்போது பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க இயக்குனர் கோகுல் முடிவெடுத்துள்ளாராம்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜூங்கா' உட்பட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் கோகுல். இந்நிலையில், இவர் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.