ஐஸ்வர்யா தனுஷின் ஒர்க்கவுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையுலகினர் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பெரும்பாலான நடிகர் நடிகைகள் இந்த லாக்-அவுட் விடுமுறையை பயனுள்ளதாக கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த லாக்-அவுட் நாட்களில், தான் தொடர்ச்சியாக செய்து வரும் யோகா குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த லாக்-அவுட் நேரத்தில் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக லாக்-அவுட் ஏற்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஒருவிதமான மன அழுத்தம் மற்றும் உடல் அளவில் சோர்வு ஏற்பட்டிருக்கும். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.

எனவே தான் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒர்க்கவுட் குறித்த சில டிப்ஸ்களை தெரிவித்து வருகிறேன். யோகா செய்வது, மனதை ஃப்ரெஷ்ஹாக வைத்து கொள்வதற்கு தேவையான பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவை இந்த நேரத்தில் மிகவும் முக்கியம். இவை மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்

ஐஸ்வர்யா தனுஷின் இந்த ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் டிப்ஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது