தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று காலமானர். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக , சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் பி.எஸ்.மணி காலமானார். இதனை அடுத்து மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.
இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்கள் சிவா, பிரசன்னா, இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், அஜித்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்..