அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெறும் முதல் நடிகர் அல்லு அர்ஜூன்தானாம். இதனால் இவர் நடித்து புஷ்பா -2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமா கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது என்ற விமர்சனம் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது, ஆனால் இப்போது அப்படி கூறவே முடியாது.

நான் ஈ, மகதீரா, பாகுபலி, புஷ்பா போன்ற படங்கள் தெலுங்கு சினிமா மீது அதிக கவனத்தை செலுத்த வைத்துள்ளது. இப்போது புஷ்பா படத்திற்காக சிறந்த நாயகன் என்ற தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெறுகிறார்.

இதில் என்ன சிறப்பான விஷயம் என்றால் தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெறும் முதல் நடிகர் இவர்தானாம். எனவே அல்லு அர்ஜுன் மீது ரசிகர்களின் பார்வை அதிகம் இப்போது உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ரூ. 170 முதல் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்போது 2ம் பாகம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாம். இப்படம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் என அறிவிப்பு வந்துள்ளது.