விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாய்ப்பை இழந்த வேதனை: ராஷ்மிகா மந்தனா தகவல்

சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஸ்மிகா மந்தனா இழந்த சினிமா வாய்ப்புகளால் வருத்தம் அடைந்துள்ளார். முக்கியமாக விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாய்ப்பை இழந்தது வேதனை அளித்தது என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், நடிப்பில் வெளியான கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, யஜமானா உள்ளிட்ட படங்கள் சூப்பட் ஹிட்டானது. இதையடுத்து தெலுங்கில்,அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த புஷ்பா 1 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது புஷ்பா-2 ஷூட்டிங் நடந்து வருகிறது.

இவர் தமிழில், கார்த்தியுடன் இணைந்து சுல்தான், விஜய்யுடன் இணைந்து வாரிசு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராஷ்மிகா மந்தனா கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தான் இழந்த பட வாய்ப்புகள் பற்றி ராஷ்மிகா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதில், ஆச்சார்யா, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்கள் தன்னை தேடி வந்ததாகவும், அவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வருவது அதிர்ஷ்டம்தான், ஆனால், அந்த வாய்ப்புகளை இழந்தது மிகவும் வேதனையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.