தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து படங்களை தயாரிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும் வரலாற்று திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

1940 களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் முன்பே வெளியாகின. சில மாதங்களுக்கு முன்பு அந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

படத்தின் தலைப்பே வித்தியாசமாக ‘1947 ஆகஸ்ட் 16’ என சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டது. மேலும் அந்த படத்தின் டீசரும் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது அந்த படம் ஏப்ரல் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 30 ஆம் தேதி கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்த வாரமே அவரின் மற்றொரு படமும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.