பாலிவுட் பிரபல நட்சத்திர ஜோடி ரன்வீர் – தீபிகா விவாகரத்தா?

மும்பை: விவாகரத்து செய்ய போகின்றனரா?... பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரன்வீர் சிங்கும் நடிகை தீபிகா படுகோனும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ரன்வீர் சிங் 2022 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான பிரபலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிரால் கன்சல்டிங் நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விளம்பரம் செய்யும் பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்தியாவில் மிகவும் பிரபலமான நபர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.

ரன்வீர் சிங் இந்தளவுக்கு பிரபலமாக இருந்தாலும் அவரது மனைவி தீபிகா படுகோனேவிடம் செல்ஃப் எடுக்க முடியாமல் திணறியுள்ளார். மும்பையில் நேற்று இரவு நடந்த தனியார் நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் கலந்து கொண்டனர்.

அப்போது ரன்வீர் சிங் இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்ற போது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார். ஆனால், ரன்வீர் சிங்கின் கையை தீபிகா படுகோனே பிடிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் ரன்வீர் சிங்கை முகம் கொடுத்துக் கூட பார்க்கவே இல்லை. இதனால், கடுப்பான ரன்வீர் சிங் வேகமாக முன்னேறினார். இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனை என்றும், விவாகரத்து செய்யப் போகிறார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் சில மாதங்களாக திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை, இந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன