தலைவர் 170 முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்த டி. செ. ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து கொண்டு வருகிறது.

இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவ்வளவு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இந்த பிரபலங்கள் எல்லாம் நடித்து வருவதன் காரணமாகவும், படத்தை இதற்கு முன்பு ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கும் காரணத்தாலும் இந்த ‘தலைவர் 170’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் பற்றி ரஜினிகாந்தும் மக்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு நிறைந்த கருத்து உள்ள படம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அறிவித்து உள்ளது .