ஏ.ஆர்.ரகுமான் மீது புகார்



இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவரது செயலாளர் செந்தில்வளவன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் ..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. , அவரது செயலாளர் செந்தில்வளவன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் ..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அனுமதி கிடைக்காததால் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சத்தை திரும்பப் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் முன்பணத்தை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் திருப்பி தரவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் தரப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.