லியோ ... நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

ஆபாச வசன விவகாரம் ... நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என்று பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று முன் தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த டிரைய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், லியோ டிரைலரில் இடம்பெற்றிருந்த ஆபாச வசன சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வகிருக்கிற அக்.19-ம் தேதி திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் புகார் மனு அளிக்கப்பட்டது.