தயாரிப்பாளருடன் மோதல் தனி ஒருவன்- 2க்கு மூடுவிழாவா?

சென்னை: தனி ஒருவன் பாகம் 2 வருமென்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளார். இதற்கு காரணம் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்த படம் தனி ஒருவன். AGS என்டெய்மெண்ட் தயாரித்த இத்திரைப்படத்தை தமிழ் இயக்குனரான மோகன்ராஜா இயக்கினார் மற்றும் இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் லக்‌ஷ்மி மேனன் இணைந்து நடித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் திரையில் அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ராஜா. இப்படம் தமிழில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது..

அதை தொடர்ந்து 2015ம் ஆண்டில் இயக்குனர் மோகன்ராஜா தனிஒருவன் படத்தின் மூலமாக மற்றொரு வெற்றி படைப்பை தமிழ் சினிமாவிற்கு தந்தார். இந்நிலையில் அவர் தனி ஒருவன் பாகம் 2 வருமென்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளார். இதற்கு காரணம் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என கூறப்படுகிறது.

மேலும் இவர் இயக்கியுள்ள காட்ஃபாதர் திரைப்படம் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஆச்சரியபடவேண்டிய செய்தி என்னவென்றால் தமிழ் திரைப்பட இயக்குனரின் இப்படம் தமிழில் வெளியாகவில்லை. ஆனால் அதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை