மனமாறிய மகள்- மருமகன்; உற்சாகத்தில் திளைக்கும் சூப்பர் ஸ்டார்

சென்னை: துள்ளிக்குதிக்கும் ரஜினி... ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மகளின் விவாகரத்து முடிவால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் ரஜினி. தற்போது உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினி உள்ளிட்ட வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லியும் இருவரும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இதனால், அவர்களை சமாதானப்படுத்த இரு தரப்பிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் அதை மறந்த இருவரும் தங்கள் வழிகளில் உறுதியாக இருந்தனர். ஆனால் அந்த உறுதிப்பாடு எல்லாம் இப்போது உடைந்து போய்விட்டது.

தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இதுதான் சூப்பர் ஸ்டாரை குழந்தை போல் குதிக்க வைக்கிறது. இதனால் அவர் அடுத்தடுத்து பல முடிவுகளை எடுத்துள்ளார்.

அதாவது குடும்ப பிரச்சனையால் தலைவன் 170 படத்தின் மூலம் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருந்தார் சூப்பர் ஸ்டார். இதனால் இப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் மனம் மாறியுள்ளார். மகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் நீங்கியதை அடுத்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த செய்தி தற்போது ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.