நடனக் கலைஞர்கள் வங்கி கணக்கில் பணம்; ராகவா லாரன்ஸ் முடிவு

நடனக் கலைஞர்கள் வங்கி கணக்கில் பணம் போட முடிவு... கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்த லாரன்ஸ், அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடி வரை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன். அதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது.

நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், ஊரடங்கினால் நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். நான் நடன இயக்குனர் தினேஷிடம் பேசியதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்கள் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்க நேரில் வரவேண்டாம்”. இவ்வாறு கூறியுள்ளார்.