சிம்புவை வைத்து படம் இயக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி

சென்னை: சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்‌ஷன், ரிதுவர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து’. இப்படம் பிப்ரவரி 2019 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் படம் வெளியான சில வாரங்களிலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உடனடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டிய நிலையில் ரஜினியே தொலைபேசியில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘என்னிடம் கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்று கூறியிருந்தார்.

இதற்காக தேசிங்கு பெரியசாமி சில வருடங்கள் ரஜினிக்காக கதையை உருவாக்கினார். ரஜினிக்கு கதை பிடித்திருந்தாலும், பட்ஜெட் பற்றாக்குறையால் படம் எடுக்கவில்லை. ரஜினியை வைத்து பல்வேறு இயக்குனர்களை அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிக்காக அவர் எழுதிய கதையை இப்போது சிம்புவை வைத்து தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தப் படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் சம்பளம் 2 கோடி ரூபாய்தான் என்கிறார்கள். படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இருவரும் சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.