அஜித்தின் துணிவு படத்திலிருந்து விலகினார் திலீப் சுப்பராயன்

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் விலகினார்... துணிவு திரைப்படத்திலிருந்து திலீப் சுப்பராயன் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.


இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார்.

மேலும் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்திலிருந்து திலீப் சுப்பராயன் விலகி இருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது.

படப்பிடிப்பில் வினோத்திற்கும் திலிப் சூப்ராயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் தான் அவர் படத்தில் இருந்து விலகி இருக்கின்றாராம். மேலும் திரைப்படத்தில் பணியாற்றி வந்த ஆர்ட் டைரக்டரும் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வலிமை திரைப்படத்தில் ஸ்டாண்ட் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டதற்கு காரணம் திலீப் சுப்பராயன் என்பது குறிப்பிடத்தக்கது.