விடாமுயற்சி படப்பிடிப்புக்கு சிக்கல்... இப்போ இஸ்ரேல் போரால்!!!

சென்னை: இஸ்ரேல் போர் துபாய், அஜர்பைசான் நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பதால் விடாமுயற்சி படத்திற்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாக இருந்தது. ஆனால், சில சிக்கல்களால் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்த நேரத்தில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து கடந்த 4ஆம் தேதி தான் படப்பிடிப்பு துவங்கியது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மேலும் தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் மற்றும் திரிஷாவிற்கும் இடையிலான காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு ஒரு புதிய பிரச்சனை வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தற்போது போர் நடந்து வருவதால், துபாய் அசர்பைஜான் போன்ற நாடுகளில் அதனுடைய தாக்கம் இருக்கும்.

அதனால் விமான போக்குவரத்துக்கு போன்ற விஷயங்களை தடை செய்ய அந்த நாட்டு அரசாங்கம் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படக்குழுவினரை எச்சரித்துள்ளார்களாம். இதன் காரணமாக படப்பிடிப்பு தடைபடும் என்பது போல் தெரிவிக்கின்றனர்.