அஜித்துக்காக தன்னிடம் 2 ஸ்கிரிப் ..இயக்குனர் அட்லீ

இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்து மிக பெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ அடுத்த யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.


அட்லீ தனது சமீபத்திய நேர்காணலில், அஜித் சார் ஒரு மாஸ் ஹீரோ. அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான கதை எங்கிட்டு இருக்கு. அவர் ஓகே சொன்னா அடுத்த நொடிய நான் தயார். அது நடக்கும்போது கண்டிப்பா வெடியா தான் இருக்கும்.

மேலும் அவர் பேசுகையில், ராஜா ராணி படப்பிடிப்பு அருகில் ‘ஆரம்பம்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அச்மயத்தில் நடிகை நயன்தாரா மூலம் தான் அஜித்தை சந்தித்ததாக அட்லீ கூறியுள்ளதோடு, அப்போது, தான் பள்ளி மாணவன் போல் இருப்பதால் பள்ளியை முடித்துவிட்டாயா என்று அஜித் கிண்டல் செய்ததாக கூறினார்.இதன் இடையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட கதையை நான் தயார் செய்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.