விஜய்யை சந்தித்து நான் ஒரு கதை சொல்லப்போகிறேன் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவிப்பு


ஜிகிர்தண்டா, பேட்ட, இறைவி, மஹான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கூட விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இதையடுத்து இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எந்த அளவிற்கு ஒரு படத்தை பிரமாண்டமாகவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படி காமிக்க வேண்டுமோ அதே அளவிற்கு அருமையாக படத்தை மக்களுக்காக கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருந்தார்.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் எழுந்து உள்ளது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை வைத்து படம் இயக்கியே ஆகவேண்டும் என்ற பெரும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், கண்டிப்பாக அவரை சந்தித்து கதை கூறுவேன் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று ஆசை படுகிறேன். அவரை இதற்கு முன்பு சந்தித்து நான் 2 கதைகளை கூறியிருக்கிறேன். ஆனால், அந்த 2 கதையும் அவரை ஈர்க்கவில்லை. ஆனால், நான் இப்போது ஒரு கதையை அவரிடம் கூறலாம் என முடிவு செய்து இருக்கிறேன்.

மேலும் அவர் தற்போது அவருடைய 68-வது திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். அவர் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்த படத்திற்கான கதை கேட்கும் போது நான் அந்த கதையை அவரிடம் கூறுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.