அயலான் எடுக்க 3 வருடம் ஆகிவிட்டதாக இயக்குனர் ரவிக்குமார் வேதனை

அயலான் படத்தின் கடைசி 50 நாள் ஷூட்டிங்கை முடிக்க 3 வருடம் ஆயிடுச்சு ...சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.ரவிகுமார் அயலான் படம் பற்றி பேசியுள்ளார். இதையடுத்து இது குறித்து பேசிய அவர் ” அயலான் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு கிளம்பினோம். அந்த படப்பிடிப்பில் 50 % முடிந்துவிட்டது. அதன் பிறகு திட்டமிட்ட படி 2018-ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடக்கவில்லை.

அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டு திரும்பவும் படப்பிடிப்பை தொடங்கினோம். பிறகு 2020-ஆம் ஆண்டு கொரானா வருவதற்கு முன்பு கொஞ்ச நாட்கள் ஷூட்டிங் போனோம். அதன்பிறகு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு 2021-ம் ஆண்டு தான் படப்பிடிப்பை முடித்தோம். கடைசியாக 50 நாட்கள் படத்தை எடுக்க 3 வருஷம் ஆகிவிட்டது” என்றும் ஆர்.ரவிகுமார் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதனை காமெடியாக வைத்து ஆர்.ரவிகுமார் இந்த அயலான் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஏற்கனவே, இவர் இயக்கிய இன்று நேற்று நாளை படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த அயலான் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.