இயக்குனர் சிவா- சூர்யா கூட்டணி படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் முடியுமாம்

சென்னை: இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பை 2023 மார்ச் அல்லது ஏப்ரலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்தா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் 3டியில் வரலாற்றுப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக நடிகை திஷா பட்டானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக ஒரு வித்தியாசமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2023 மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.