மங்காத்தா -2 பற்றி முக்கிய தகவல் தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு

அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வெடியை பற்ற வைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆம். மங்காத்தா-2 குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்தப் படத்தில் அஜித் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். இப்படம் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களையும் இன்று வரை கொண்டாட வைக்கும் படமாக இருந்து வருகிறது.

அஜித் ரசிகர்கள் அனைவரும் மங்காத்தா 2 படம் எப்போது உருவாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் மனது வைத்ததால் தான் மங்காத்தா படம் உருவானது.

தற்போது நான் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். கொரோனா முடிந்து இந்த படத்தின் வேலைகளை முடித்து விட்ட பிறகு அஜித் மனது வைத்தால் நிச்சயம் மங்காத்தா-2 உருவாகும் என கூறியுள்ளார்.

மேலும் அஜித் தன்னிடம் ஒரு ஜாலியான காமெடி படம் ஒன்றை உருவாக்குங்கள் என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா தாக்கம் எப்போது முடியும்? மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.