நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இத்திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இதையடுத்து இதில் அன்னபூரணி திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். தற்பொழுது, நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இந்த படத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருக்கிறார் நயன்தாரா, முதல் பாடலில் சிறு வயதில் இருக்கும் காட்சிகளை வித்து பாடல் வரிகள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதனை வைத்து பார்க்கையில், படம் முழுக்க வீட்டு குத்து விளக்காக நடித்திருப்பார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குளில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிராராம்.