புதிதாக பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது அப்பாவுக்கு புதிது அல்ல - பீட்டர் மகன் அதிரடி

சமீபத்தில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்த அடுத்த நாளில் இருந்தே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர் குடிகாரர் என்றும் அவர் மறுவாழ்வு மையத்தில் சில மாதங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு நடிகை வனிதா மறுப்பு தெரிவித்து, திருமண நாளில் கூட பீட்டர் பால் குடிக்கவில்லை. அவர் ஒயிட் ஒயின் மட்டும்தான் குடித்தார் எனவே அவர் குடிகாரர் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வனிதாவின் இந்த கருத்துக்கு பீட்டர்பால் மகன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:- எனது அப்பாவுக்கு குடிப்பழக்கம் இல்லை என்று வனிதா சொல்வது முற்றிலும் பொய். எனது தந்தை குடிப்பழக்கம் காரணமாக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் மறுவாழ்வு மையத்தில் இருந்து அவர் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

மேலும் தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த பெண்ணின் வயிற்றில் தனது குழந்தை வளர்வதாகவும் எனது அப்பா எனது அம்மாவிடம் கூறியதாகவும் அதன் பின்னரே அம்மா அப்பாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

மேலும் அப்பாவுக்கும் வனிதாவுக்கும் திருமணம் என்று கேள்விப்பட்டபோது எங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. ஏனெனில் எனது அப்பாவுக்கு புதிதாக பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது புதிது அல்ல. அவர் எங்கு வேலை பார்த்தாலும் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருப்பார். இவ்வாறு பீட்டர் மகன் கூறியுள்ளார்.