தொடர்ச்சியாக த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு குறித்து ஹன்சிகா ஓபன் டாக்

திருமணம் முடிந்த பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.இதையடுத்து தொடர்ச்சியாக இவர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து தமிழில் காந்தாரி தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என த்ரில்லர் படங்களில் நடித்து இருக்கிறார். இதில் “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஹன்சிகா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எதற்காக தொடர்ச்சியாக த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருகிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ஹன்சிகா ” மக்கள் இப்போது அம்மாதிரி படங்களை பார்க்க தான் விரும்புகிறார்கள்.

நான் வேண்டுமென்றே அப்படி பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்கவில்லை என்னிடம் வரும் கதையும் அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படமாக வருகிறது. கதையும் கேட்டவுடன் மிகவும் பிடிக்கிறது. அதனால் அப்படி பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ரசிகர்கள் என்னிடமிருந்து அந்த மாதிரி படங்களை தான் விரும்புகிறார்கள். எனவே, தமிழ் மொழி மட்டுமின்றி த்ரில்லர் கதையம்சத்தை வைத்து எந்த நல்ல படம் என்னிடம் வந்தாலும் நான் நடிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.