ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள்; ரசிகர்களுக்கு விஜய் அன்பு கட்டளை

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்... ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று விஜய் அலுவலகத்தில் இருந்து மன்ற தலைவர்களுக்கு தொலைபேசி பறந்துள்ளது.

நடிகர் விஜய்க்கு நாளை 22ம் தேதி பிறந்த நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பும். பட ரிலீஸ், புதுப்பட அறிவிப்பு என விஜய் பற்றிய ஸ்பெஷல் விஷயங்கள் அனைத்தும் அன்று சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைக்கும். தற்போது கொரோனா பிரச்சனையால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும் , மனதளவிலும் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா பிரச்சனை காரணமாக மக்கள் சிக்கலில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென ரசிகர்களுக்கு விஜய் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளாராம். இது குறித்து அனைத்து ரசிகர்கள் மன்றத்திற்கும் விஜய் அலுவலகத்தில் இருந்து போன் கால் பறந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா பிரச்சனையால் கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். எனவே தனது பிறந்த நாளின் போது தேவையற்ற ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு , கொரோனாவால் திண்டாடும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான நாளை 22ம் தேதி அன்று அவர் நடித்துள்ள மாஸ்டர் படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.