புதிய பயணத்தை தொடங்கும் செய்தியை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்

சென்னை : எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கும் செய்தியை மகிழ்ச்சியான இதயத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பெண் ரசிகர்களை பெற்றார் ஹரிஷ் கல்யாண். இந்நிலையில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணி, தாரள பிரபு, ஓ மணப்பெண்ணே என பல படங்களில் நடித்தார் ஹரிஷ் கல்யாண்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ரைசாவை ஹரிஷ் கல்யாண் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மூன்று படங்களில் இணைந்து நடித்தனர். இதையடுத்து ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக கூறப்பட்டது.

ஏனெனில் ஹரிஷ் கல்யாண் அவர்கள் இணைந்து நடித்த ஓ மணப்பெண்ணே படத்தின் வெளியீட்டின் போது ஹார்டின் எமோஜிகளுடன் பிரியா பவானி சங்கரின் படத்தை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஹரிஷ் கல்யாண். எனவே எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கும் செய்தியை மகிழ்ச்சியான இதயத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களின் ஆசியுடன் நர்மதா உதயகுமாருடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஹரிஷ் கல்யாண் தனது காதல் நிர்மலாவின் படத்தைப் பதிவிட்டுள்ளார். அதாவது நிர்மலா ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஹரிஷ் கல்யாணும் நிர்மலாவும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், வரும் அக்டோபர் 28-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஹரிஷ் கல்யாண் விரைவில் வெளியிடவுள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.