நான் ஆண்களை மட்டுமே முழுமையாக நம்புகிறேன் - நடிகை வனிதா விஜயகுமார்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் முடிந்து ஒரு நாள் கூட முழுதாக முடியாத நிலையில் பீட்டரின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது கணவரை மீட்டு எடுப்பேன் என்று ஆவேசமாக பேட்டி கொடுத்தார். இதற்கு இந்த பிரச்சனையை நாங்கள் சட்டபூர்வமாக சந்திப்போம் என்று வனிதாவும் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் ஒருசில பெண்கள் பொறாமை பிடித்தவர்களாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஆண்களை குடிகாரர்கள், பெண் பித்துப் பிடித்தவர்கள் என்று அழைப்பது மிகவும் எளிதானது. ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் எனக்கு அதிகமாக நண்பர்களாக உள்ளனர். நான் ஆண்களை மட்டுமே முழுமையாக நம்புகிறேன். சில பெண்கள் அதிக பொறாமை கொண்டவர்களாகவும் தந்திரமானவர்களாகவும் இருக்கின்றார்கள்.

என்னை ஒரு ஆண் பேரினவாதி என்று அழைத்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் ஒரு பெண்ணியவாதி அல்ல. பாலினத்தை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே நான் இருப்பேன் என்று வனிதா கூறியுள்ளார்.