நடிகர் சூர்யாவின் அடுத்த நான்கு படங்கள் குறித்த அதிரடி தகவல்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடித்துள்ள 38 ஆவது படம் சூரரைப்போற்று ஆகும். இந்த படம் ஓடிடியில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த நான்கு படங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் உள்ள 'அருவா' என்ற திரைப்படம்தான் அவரது 39ஆவது திரைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகி விட்டதை அடுத்து சூர்யா 39’ படத்தை இயக்குவது யார் என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

இந்த நிலையில் சூர்யாவின் 40வது திரைப்படம் தான் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கூட்டத்தில் ஒருவன் என்ற என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படம்தான் அவரது 41 வது படம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரம் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் மட்டும் தான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் சூர்யாவின் 42 வது படம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. எனவே சூர்யாவின் கைகள் தற்போது நான்கு படங்கள் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.