காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை தொடங்குகிறாரா நடிகர் விஜய்?

சென்னை: வரும் 15ம் தேதி காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளராம்.

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நேற்று சென்னை பனையூரில் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ள அவர் , விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை சந்தித்தார்.

இதையடுத்து கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்திருந்தார் . இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் , அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.

மேலும் அத்துடன் மக்கள் நல பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் உதவிகளை கேட்டுப் பெறுமாறு அறிவுறுத்தி உள்ள விஜய் இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் வரும் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளராம்.

விழியகம், குருதியகம், விருந்தகத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.