பிரபாஸ் நடிக்கும் படத்தில் வில்லனாக கமல் நடிப்பது உறுதி?

சென்னை: பிரபாஸ் நடிக்கும் படத்தில் வில்லனாக கமல் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உண்மையா என்பதை கமல் தரப்பினர்தான் உறுதி செய்ய வேண்டும் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் மகாநடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் நாக் அஸ்வின். இந்தப் படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது.

சாவித்திரியாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார். தற்போது பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்க நாக் அஸ்வின் தயாராகி வருகிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.