பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் வதந்தி என்று இந்திரஜா கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்
இந்த நிலையில் மேலும் ஒரு சிலர் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும் விஜய்யின் 'பிகில்' படத்தில் நடித்தவருமான இந்திரஜா என்றும் செய்திகள் வெளிவந்தன.
சமீபத்தில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்திலிருந்து அவர் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், எனவே விரைவில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது இது குறித்து இந்திரஜா விளக்கம் அளித்துள்ளார். தான் ஹைதராபாத்தில் ஒரு படபிடிப்பிற்க்காக வந்துள்ளதாகவும் அங்கு தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.