இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல்

சென்னை: இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கியுள்ளாராம். இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இங்கு இறுதிகட்ட ஷூட்டிங்கை படமாக்கும் ஷங்கர் அதோடு மொத்த படத்தையும் முடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.