அதெல்லாம் பொய்... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா தரப்பினர்

சென்னை: சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதில் உண்மையில்லை என்றும் சமந்தா வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த யசோதா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மைசைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி அடைந்தார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை மீண்டும் வருமாறு கேட்டு கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். இது குறித்து சமந்தா அளித்த பேட்டியும், யசோதா படமும் வைரலானது.

இந்நிலையில், சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதில் உண்மையில்லை என்றும் சமந்தா வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சமந்தா நடக்க முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட சமந்தாவின் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் தற்போது சமந்தா தரப்பினர் அது உண்மையில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் தரப்பில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.