தமிழகத்தில் மட்டும் ரூ.155 கோடி வசூல் செய்துள்ளதாம் ஜெயிலர் படம்

சென்னை: ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் இமாலய சாதனை படைத்துள்ளது.

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் ரஜினியின் மாஸ் கம் பேக் ஆக அமைந்து, உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது ஜெயிலர் படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் இமாலய சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் ரூ. 170 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.