ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூல்

சென்னை: 3 நாள் முடிவில் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ரீமேக் படங்களில் நடித்து பிரபலமாகி பின் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. பேராண்மை, கோமாளி, தனி ஒருவன், பொன்னியின் செல்வன் என கதைகளை தேர்வு செய்வதில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார்.

கடந்த வருடம் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருந்தது, அதோடு இந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெருங்கடலில் நடக்கும் அரசுக்கு எதிரான தவறான விஷயங்களை பற்றி கூறும் கதைக்களத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் 3 நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.