ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 5 நாட்களில் இத்தனை கோடி வசூல்

5 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.35 கோடி வசூல் ...இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, இன்றுடன் 6-வது நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, இந்த படத்தை பார்த்த தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர் பாராட்டுகளை குவித்தனர். அந்த வகையில், நடிகர்களில் தனுஷ் மற்றும் சிம்பு வாழ்த்து தெரிவித்த நிலையில், தனது தீவிர ரசிகரின் படத்தை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவை வர்ணித்து பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


தற்பொழுது, இந்த படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த தகவலின்படி, இந்த படம் ரூ.35 கோடியை தாண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.77 கோடி வசூல் செய்திருக்கலாம் என்றும், தெலுங்கில் ரூ.3.95 கோடி, கர்நாடகாவில் ரூ.1.65 கோடி, கேரளா ரூ.1.05 கோடி மற்றும் வெளிநாடு ரூ.4.35 கோடி (₹.524K) என 5 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.35 கோடியை வசூலித்திருக்கலாம் என கணக்கிடப்பட்டு உள்ளது.