வரவேற்பு பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்

சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே மாபெரும் வெற்றியடைந்த படத்தின் தலைப்பில் அதே போன்ற கதைகளையில் உருவாகியுள்ள படம் தான் இது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விமர்சன ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது.