அடுத்தப்படம் குறித்து உடனே அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்

சென்னை: அடுத்த படம் குறித்து அப்டேட்... கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அவரது அடுத்த பட அப்டேட் குறித்து கமலே தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு லோகேஷ் இயக்கத்திலான விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசன் திரையில் தோன்றியிருக்கிறார். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை திரையரங்கை நோக்கி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். தியேட்டர்கள் அனைத்தும் அதகளப்படுகிறது.

இப்படி இருக்கையில், கமலின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை அவரே கூறியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை பற்றி சொன்னது தற்போது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில், ஃபகத் பாசிலை வைத்து டேக் ஆஃப், சி யு சூன், மாலிக் ஆகிய படங்களை மலையாளத்தில் இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்த மகேஷ் நாராயணன்தான் கமல் நடிப்பில் உருவான விஸ்வரூபம் படங்களின் இரண்டு பாகத்திற்கும் எடிட்டராக பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் களம் சார்ந்த கதையாக கமல்-மகேஷ் நாரயணன் படம் இருக்கும் என்றும், படத்தின் பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.