ஐந்தாவது வாரத்திலும் வசூலை வாரி குவித்த கமலின் விக்ரம் படம்

சென்னை: ஐந்தாவது வாரத்திலும் வசூலை அள்ளி வருகிறது நடிகர் கமலின் விக்ரம் படம் என்று கோலிவுட்வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு படங்கள் கமிட்டாவதையும், நடிப்பதையும் நிறுத்தி இருந்தார் கமல்ஹாசன். நடிப்பதற்கு சற்றே இடைவேளை விட்டிருந்தார் என்று கூறலாம். ஆனாலும் சின்னத்திரையில் கலக்குவது, அரசியலில் ஈடுபடுவது என பிஸியாகவே இருந்தார். இந்தியன் 2 படமும் நடித்து வந்தார், ஆனால் சில பிரச்சனைகளால் படம் அப்படியே நின்றுவிட்டது, எப்போது தொடங்கும் என தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்து விக்ரம் என்ற படத்தில் நடித்தார் கமல். அப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் கலக்கியது. இப்படத்திற்காக கமல்ஹாசன் செய்த புரொமோஷன் தான் மிகவும் ஹைலைட். ஒரு பேட்டியில் கூட இயக்குனர் லோகேஷ் பேசும்போது, ஒரு சேனலுக்கு சென்று பேட்டி கொடுத்துவிட்டு வருவதற்குள் கமல்ஹாசன் இன்னொரு மாநிலத்தில் இருப்பார்.

அந்த அளவிற்கு இப்படத்திற்காக அவர் செய்த புரொமோஷன் வேலை அதிகம் என பேசியிருந்தார். உலகம் முழுவதும் இந்த படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதில் 4 வாரத்தை தாண்டி 5வது வாரத்திலும் படத்திற்கு நல்ல புக்கிங் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் 30 நாட்களில் படம் ரூ.16.28 கோடி வரை வசூலித்துள்ளதாக அட்டகாசமான தகவல் வந்துள்ளது. இதை கோலிவுட்வாசிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.