புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அவருடைய இசையில், ஒரு பாடல் பதிவானது.

இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 பிரபல கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடை பெறுகின்றன.

எஸ்.லட்சுமன்குமார் தயாரிக்கிறார். அனைத்து அம்சங்களையும் கொண்ட ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது.

கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த 'சிறுத்தை' படம் வெற்றி கரமாக ஓடி தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் லாபத்தை கொடுத்தது. அதன்பிறகு அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் இதுதான் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.