கீர்த்திசுரேஷ் இனி நடிக்கமாட்டார்; உலா வரும் செய்திகளால் ரசிகர்கள் கவலை

இனி நடிக்க மாட்டார்... மலையாள வரவான கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். அதுமட்டுமல்லாமல் தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்கார், பெண்குயின் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தற்போது மிஸ் இந்தியா, அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் உடல் எடையை குறைத்துவிட்டதால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்ததாக படம் நடிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

லும் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கப் போகிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாக்களில் நல்ல பெயரை எடுத்துள்ள இந்த நேரத்தில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.