மஞ்சள் தாலியில் வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார்.. சும்மா கெத்தா..

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. தேனிலவுக்கு தாய்லாந்துக்கு சென்றார்கள். நாடு திரும்பிய கையோடு ஜவான் பாலிவுட் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் நயன்தாரா.இடையே பிரேக் கிடைத்ததும் சென்னைக்கு வந்து கணவருடன் நேரம் செலவிட்டார்.

மீண்டும் மும்பைக்கு கிளம்பிய நயன்தாரா விமான நிலையத்தில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது.

அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நயன்தாரா கழுத்தில் இருந்த தாலி தான். மஞ்சள் கயிறை மாற்றாமல் அதை தொடர்ந்து அணிந்திருக்கிறார். முன்னதாக தாய்லாந்து சென்றபோதும் சரி, தற்போது மும்பையிலும் சரி தாலியுடன் தான் வலம் வருகிறார்.

திருமணமான நடிகைகள் தாலி அணியாமல் தான் வெளியே வருகிறார்கள். அப்படி இருக்கும்போது நயன்தாரா மஞ்சள் கயிறுடன் கெத்தாக வலம் வருகிறார்.

பிற நடிகைகள் தாலி அணிய தயங்கும் போது நயன்தாரா மட்டும் தாலியுடன் தைரியமாக வருவதில் இருந்தே அவருக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கை தெரிகிறது.தாலி அணிவதால் தன் நட்சத்திர அந்தஸ்து பாதிக்குமோ என தலைவிக்கு பயமில்லை என்கிறார்கள் நயன்தாராவின் ரசிகர்கள்.