விஜய்யின் வாரிசு படத்தின் தமிழக உரிமையை பெற்ற தயாரிப்பாளர் லலித்குமார்

சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.


விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர உள்ளது.


விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘வாரிசு’ படத்தின் மூன்று போஸ்டர்களும் மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்களின் மனதில் ஒருபக்கம் எதிர்பார்ப்பு இருக்க மறுபக்கம், படம் சுமாராக இருக்குமோ என்ற பயமும் இருந்து வருகிறது.

இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.


படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றி இருக்கிறார். இவர் மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.